Wednesday, March 28, 2007

விடுதலைப் புலிகளின் வான்படை குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை

[புதன்கிழமை, 28 மார்ச் 2007] தமிழீழ விடுதலைப் புலிகாளல் நடத்தப்பட்ட வான் தாக்குதலை கண்டிப்பதுடன், விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது: இந்நடவடிக்கை அமைதிப் பேச்சுக்களை சீர்குலைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படைப் பலம் சிறிலங்காவிற்கு மட்டுமல்லாது தென் ஆசியா பிராந்தியத்திற்கு ஆபத்தானது. இலகு ரக வானூர்திகளை ரடார் திரைகளில் அவதானிப்பது கடினமானது. இதன் மூலம் தற்கொலைப்படைத் தாக்குதல்கள், குண்டுவீச்சுக்கள் என்பவற்றை மேற்கொள்ளலாம் என்பதனை அனைத்துலக சமூகம் உணரவேண்டும். அனைத்துலக பயங்கரவாதக்குழுக்கள் தமது உத்திகளை ஒருவருக்கு ஒருவர் பயன்படுத்துவதுண்டு. இது பயங்கரமானது என்பதை பிரித்தானியா அரசாங்கம், கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.