எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை சிறிலங்காப் படையினர் வெற்றிகரமாக முறியடிப்பார்கள் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடகத்துறையினரை தனது அலுவலகத்தில் சந்தித்த மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது:
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள எத்தகைய குறைபாடுகள் காரணம் என படைத்தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். மக்கள் சந்தேகத்திற்கு இடமான விமானங்களைக் கண்டால் 116 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இத்தாக்குதல் தொடர்பாக சில இராஜதந்திர வட்டாரங்களை நம்ப வைப்பது அரசாங்கத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பல நாடுகள் எமக்கு தொழில்நுட்ப உதவிகளை அளிக்க முன்வந்துள்ளன.
சிறீபதி சூரியாராச்சியின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்கப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது:
சிலர் தமது அரசியல் அதிகாரங்களை இழக்கும் போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வழமையானது. நான் ஆரம்பித்தது தொடர்பாக என்னிடம் பல யோசனைகள் உள்ளன. ஆனால் இப்பிரச்சனையில் எனது பங்கு இல்லை.
தாக்குதலைத் தொடர்ந்து வானூர்தி நிலையத்தில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு தனிப்பட்ட விரோதங்கள் இல்லை. அவர்கள் தமது பெறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க முற்பட்டது மட்டும் தான் எனது கவலை என்று அவர் தெரிவித்தார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.