Monday, March 26, 2007

சிறிலங்காவிற்கான ஹொங்கொங் வானூர்தி சேவை இடைநிறுத்தம்.

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007] சிறிலங்காவிற்கான அனைத்து வானூர்தி சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஹொங்கொங்க் நாட்டின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான கதே பசுஃபிக் ஏயர்வேஸ் அறிவித்துள்ளது. அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சிறிலங்கா வான்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு தமிழீழ வான்படை தனது இரு வானூர்திகளை பாவித்து வெற்றிகரமான தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியிருந்தது. இச்சம்பவத்தினால் அருகில் இருக்கும் அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய வானூர்தி சேவையாக பிரபலமடைந்துள்ள கதே பசிஃபிக், அங்கு நடைபெற்ற தாக்குதல் குறித்து விரிவாக ஆராய்ந்து நிலைமைகளைக் கண்டறிந்த பின்னர், தனது சேவையைத் தொடர்வது தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாகவும், தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.