Monday, March 26, 2007

கட்டுநாயக்க விமானத்தளம் மீது புலிகளின் வான்படையினர் தாக்குதல்: 3 படையினர் பலி! 17 பேர் காயம்

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007]

கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது இன்று அதிகாலை 12.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான் படையினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள்கட்டுநாயக்க விமானத்தளத்தில் கிபிர் மற்றும் மிக் விமானத் தரிப்பிடங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளங்கள் மீதும், இராணுவ இலக்குகள் மீதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் இனிவரும் காலங்களில் தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் திங்கட்கிழமை 1.30 மணியளவில் விமானத் தளத்தினுள் வெடியோசைகளுடன் துப்பாக்கி மோதல்களும் இடம்பெற்றதாகவும் தற்பொழுது அங்கு முழுமையான அமைதி நிலவுவதாகவும் படையித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் தரித்து நிறுத்தப்பட்ட 2 உலங்கு வானூர்திகள் சேதமடைந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதலின் போது 3 விமானப் படையினர் பலியானதோடு மேலும் 17பேர் காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த படையினர் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.