[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007]-பண்டார வன்னியன்.
விடுதலைப் புலிகளின் வான்படையினர் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தின் மீது நடத்திய தாக்குதல் சிறிலங்கா அரசின் போர்த்திட்டங்களை ஒட்டுமொத்தமாக மீள் பரிசீலனை செய்ய வேண்டியதானதொரு நிலையைத் தோற்றிவித்துள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
உலகில் விடுதலைக்காகப் போரிடும் ஒரு அமைப்பு நடத்திய வான்தாக்குதல் என்ற ரீதியில் சர்வதேச ரீதியில் இத்தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாக சர்வதேசத்தின் விசேடமாக தென்னாசிய நாடுகளின் கவனத்தை இத் தாக்குதல்கள் கவர்ந்துள்ளதாகவும் அவர்களை இது குறித்து அக்கரை கொள்ள வைத்துள்ளதாகவும் அவ் ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் போர் நடவடிக்கையில் குறிப்பாக வலிந்த தாக்குதலில் இராணுவம் முனைப்பு காட்டி வரும் வேளையில் கட்டுநாயக்கா விமான படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் வான்படை மேற்கொண்ட தாக்குதலானது சிறிலங்கா அரசின் போர்த்திட்டத்திற்கு மாற்றத்தையும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் புதிய ஏற்ப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியதான சுழ்நிலையும் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
அது மட்டுமன்றி விடுதலைப் புலிகள் விரைவில் தோற்க்கடிக்கப்படுவார்கள் என்றதும் அவர்களின் விநியோகத்திற்கு அன்மைக் காலத்தில் பாரிய சேதத்தை விளைவித்து விட்டதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அன்மையில் செய்து வந்த பிரசாரத்தை இத்தாக்குதல் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Tuesday, March 27, 2007
கட்டுநாயக்கா தாக்குதல் மூலம் சிறிலங்கா அரசு தனது போர்த்திட்டங்களை மாற்றவேண்டியுள்ளது : ஆய்வாளர்கள்..
Tuesday, March 27, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.