[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 சிறிலங்கா இராணுவத்தினரும், 4 ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்த போது அது வெடித்துச் சிதறியது. இத்தாக்குதலில் மேலும் 2 இராணுவத்தினரும், 2 காவல்துறையினரும், 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் கடுமையான உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியையும் மூடியுள்ளனர். கொம்மாந்துறை மட்டக்களப்பின் வடக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புதினம்.கொம்.
Tuesday, March 27, 2007
மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: 2 இராணுவத்தினரும் 4 ஈ.பி.டி.பியினரும் பலி.
Tuesday, March 27, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.