Tuesday, March 27, 2007

மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: 2 இராணுவத்தினரும் 4 ஈ.பி.டி.பியினரும் பலி.

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 சிறிலங்கா இராணுவத்தினரும், 4 ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்த போது அது வெடித்துச் சிதறியது. இத்தாக்குதலில் மேலும் 2 இராணுவத்தினரும், 2 காவல்துறையினரும், 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் கடுமையான உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியையும் மூடியுள்ளனர். கொம்மாந்துறை மட்டக்களப்பின் வடக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.