Thursday, March 01, 2007

முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு.

[வியாழக்கிழமை, 1 மார்ச் 2007]


முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியில் சிறிலங்கா வான்படையினரின் 4 கிபிர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இத்தாக்குதல்கள் இன்று வியாழக்கிழமை காலை 8.25 மணி முதல் 8.35 மணிவரை நடத்தப்பட்டுள்ளன.

இதில் மக்களின் பெருமளவு விவசாய முயற்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.