Saturday, March 31, 2007

'விடுதலைப் புலிகளுக்கு நாம் 70 மில்லியன் ரூபாய்கள் கொடுக்கவில்லை.

[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] "வடக்கு - கிழக்கு மாகாண மக்களை அரச தலைவர் தேர்தலில் வாக்களிக்க விடாது தடுப்பதற்காக சுதந்திரக்கட்சி கட்சி 70 மில்லியன் ரூபாய்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியது என்ற குற்றச்சாட்டை" சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினருக்கு கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் பிரியதர்சன யாப்பா தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளுக்கு நாம் எந்தவிதமான பணமும் வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அதன் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளின் பின்னர் அரசாங்கம் மீது பரந்தளவில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது. 'மௌபிம" மற்றும் 'சண்டே ஸ்ராண்டட்' பத்திரிகைகளின் வங்கிக் கணக்குகளை முடக்கியது சட்டப்படியானது. சட்டத்திற்கு முன் எல்லோரும் சமனே. நான் உட்பட அது எல்லோருக்கும் பொருந்தும்" என்றார் அவர். வடக்கு - கிழக்கு மாகாண மக்களை அரச தலைவர் தேர்தலில் வாக்களிக்க விடாது தடுப்பதற்காக சுதந்திரக்கட்சி கட்சி 70 மில்லியன் ரூபாய்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியது என்ற குற்றச்சாட்டை முதலில் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்திருந்தார். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.