[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வான்படை தனது முழு வளத்தையும் பயன்படுத்தும். முற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே முன்னாள் வான்படையின் வானோடி ஒருவர் வைத்திருந்த சிறிய ரக வானூர்தியை நாம் கைப்பற்றியுள்ளோம். அவர் ஒரு பயிற்சியாளராக இருந்தவர், இலகு ரக வானூர்தியை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து அனுமதியையும் பெற்றவர் ஆவார். எனவே அவர், அந்த வானூர்தியை நாட்டுக்குள் கொண்டுவந்தது சட்டரீதியானது. ஆனால் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு அதனை எமது பாதுகாப்பில் வைத்துள்ளோம். அந்த வானூர்தி எமது கையில் இருக்கும் வரை விடுதலைப் புலிகளால் அதனை கைப்பற்ற முடியாது" என்றார் அவர். நன்றி:புதினம்
Saturday, March 31, 2007
'வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்'
Saturday, March 31, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.