[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] கட்டுநாயக்க விமானத் தளம் மீதான வான்புலிகளின் விமானத் தாக்குதலில் சிறீலங்கா விமானப் படையினரின் 40 % விமான சுடுதிறன் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கட்டுநாயக்க விமானத் தாக்குதலில் இரு தாக்குதல் உலங்குவானூர்த்திகள் சேதமடைந்துள்ளதாகத் படைத்தரப்பினர் தெரிவித்த போதும் சிறீலங்கா விமானப் படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. விமானப் பொறியல் பகுதி தேசத்திற்கு உள்ளானதாதத் தெரிவித்த விமானப் படையினர் அங்கு நடந்த தேசத்தை முற்றாக இருட்டடிப்புச் செய்துள்ளது. தாக்குதலில் தொடர்பில் பொறியியல் பகுதியில் பணிபுரிந்த விமானப்படையின் பொறியிலாளரை மேற்கொள்காட்டி சில தகவல்களை சிங்கள நாளேடும் உறுதி செய்துள்ளது. சிறீலங்கா விமானப் படையினரின் பாகிஸ்தானிடம் கொள்வனவு செய்திருந்த இரு யுத்த உலங்கு வானூர்திகளும் முற்றாக சேதமடைந்து பாவிக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் வான்புலிகளின் விமானத் தாக்குதலில் வீசப்பட்ட குண்டுகள் கிபிர் மற்றும் மிக் விமானத் தரிப்பிடங்களில் வீழ்ந்து வெடித்துள்ளதால் பெரும் தீ பரவி விமானத் தரிப்பிடங்கள் எரிந்துள்ளன. இதில் சிறீலங்காப் படையினரின் யுத்த விமானங்கள் சில எரிந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் பொறியிலாளர் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமானத் தளத்தில் 6 மிகையொலி விமானங்கள் வழமையாகத் நிறுத்தப்பட்ட போதும் தாக்குலின் பின்னர் எந்த மிகையொலி விமானங்களும் மேலெழுந்து பறக்கவில்லை என்பது இங்கே பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Tuesday, March 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.