[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பெண் சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட 10 இராணுவத்தினரும், 16 ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் 2 இராணுவத்தினரும், துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியினர் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 2 இராணுவத்தினரும், 2 காவல்துறையினரும், 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்தது. இச்சம்பவத்தை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியையும் மூடியுள்ளனர். கொம்மாந்துறை மட்டக்களப்பின் வடக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
Tuesday, March 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.