Wednesday, February 28, 2007

செய்மதியில் 'புலிகளின் குரல்'

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பான 'புலிகளின் குரல்' வானொலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.03.07) செய்மதியிலும் ஒலிபரப்பாகவுள்ளது.

தற்போது தனது ஒலிபரப்பிற்கு தாயகத்தில் வானலையையும், உலகெங்கும் செல்வதற்கு இணையத்தையும் பயன்படுத்தி வரும் 'புலிகளின் குரல்' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் செய்மதி வழியாகவும் தனது ஒலிபரப்பினை ஆரம்பிக்கவுள்ளது.

இதனால் செய்மதி வழியேயான 'புலிகளின் குரல்' ஒலிபரப்பை கேடடு தென்னாசிய நாடுகளில் வாழும் மக்கள் பயனடைவர். நாள்தோறும் காலை 6.30 மணிமுதல் 9 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 9.30 மணி வரையும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் யூரோப் ஸ்ரார் செய்மதி அலைவரிசையில் 'புலிகளின் குரல்" ஒலிபரப்பாகவுள்ளது.

தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் அலைவரிசையை மீள ஒருதடவை தேடிச் சரி செய்வதன் மூலம் உங்கள் அலைவாங்கியில் உள்ளீடு செய்ய முடியும்.

தாயகத்தில் 'புலிகளின் குரல்' வானொலியானது, தமிழீழ வானொலி என்னும் வர்த்தக ஒலிபரப்புடன் நாள் முழுதும் ஒலிபரப்பாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதினம்.கொம்.