[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]
பொலிஸ் தலைமையக 4 ஆம் மாடியிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவில் (சி.ஐ.டி.) தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நாவலடி பகுதியில் வைத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த தமிழ் வாலிபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்றுக் காலை 10 மணியளவில் தனது உடைகளை கழுவ வேண்டுமென அனுமதி பெற்றுக்கொண்டு குளியல் அறைக்கு சென்றுள்ள இவர் போர்வையை அங்குள்ள கூரைத் தடியில் கட்டி அதில் தொங்கி இறந்துள்ளதாக சி.ஐ.டி. பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுவரை இந்த இடத்தில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் 4 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்து கொண்டவர் ஓ.ஏ.சந்திரசேகர என்பவராவார் என குறிப்பிட்ட பொலிஸார் இவருக்காக பாதுகாப்பு கடமைகளில் நியமிக்கப்ப ட்டிருந்த இரண்டு பொலிஸார், சி.ஐ.டி. பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அமைச்சர் விஜேதிலக்க வினால் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Wednesday, February 28, 2007
4 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் சுருக்கிட்டு தற்கொலை
Wednesday, February 28, 2007





