Wednesday, February 28, 2007

நியூயோர்க் பங்குச் சந்தையில் மாற்றம் இல்லை.

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]


நியூயோர்க் பங்குச்சந்தையில், நேற்று நடந்த பங்கு விலை வீழ்ச்சிக்குப் பிறகு, இன்று மாற்றம் ஏதுமின்றி பங்கு வர்த்தகம் தொடங்கியது.

நேற்று ஏற்பட்ட விலை வீழ்ச்சி, 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின்னர், மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

செவ்வாய்க்கிழமையன்று ஏற்பட்ட விலை வீழ்ச்சிக்கு ஒரு பகுதிக் காரணமாக, சீனாவின் பிரதான பங்குச்சந்தையான, ஷாங்காய் பங்குச்சந்தையில் பங்கு விலைகளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி கூறப்படுகிறது.
ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குகளில் பெருமளவு பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து, ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதம் வரை குறைந்தன. ஆனால், ஷாங்காய் பங்குச் சந்தை அதன் இழப்புகளில் ஓரளவை சரிக்கட்டி, ஏறக்குறைய நான்கு சதவீதம் உயர்ந்து, முடிந்தது.