Tuesday, February 27, 2007

யாழில் கடத்தப்பட்ட இருமாணவர்களும் விடுதலை.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007] வடமராச்சி உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையை சேர்ந்த இரு மாணவர்கள் கடந்த சனிக்கிழமை காணமல் போயிருந்தனர். இவர்கள் இருவரும் நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பாக வீடு சென்றுள்ளனர். கடத்தல்காரர்கள் இவர்கள் இருவரையும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை வானில் உடுப்பிட்டி பகுதியில் அதிகாலை விட்டுச்சென்றுள்ளதாகவும் பின்னர் காலை சூரியன் உதயமானதும் இவர்கள் வீடு திரும்பியதாகவும் மேலும் அறியமுடிகிறது. பழைய கட்டடிம் ஒன்றினுள் தம்மை அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள் சில புகைப்படங்களை காட்டி அவர்கள் தொடர்பான விபரங்களை கூறுமாறு கேட்டதாகவம் அவ் இடம் இராணுவ முகாம் போன்று இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.