Tuesday, February 27, 2007

சிறப்பு அதிரப்படை முகாம் முற்றுகை. இருவர் பலி, நால்வர் காயம்.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007] அம்பாறை திருக்கோவில் பகுதியில், அண்மையில் சிறப்பு அதிரடிப்படையினரால் நிறுவப்பட்ட முகாம் அதிரடித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று இரவு 8.30 மணிக்கு தங்கவேலாயுதபுரம் சங்கர் மலையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முகாம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் மற்றும் நான்கு படையினர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இத் தாக்குதலின் போது முகாம் முற்றாக சேதமடைந்துள்ளது.