Wednesday, February 28, 2007

சிறீலங்கா இராணுவத்தினர் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை அழித்துள்ளனர்.

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]


சிறீலங்கா இராணுவத்தினர் 230 நோட்டிக்கல் மைல் மாத்தறைக்கு வெளியே உள்ள தென்பகுதி கடற்பரப்பில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை அழித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இப் கப்பலானது சர்வதேச கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் எச்சரிக்கை சூட்டுக்கு நிறுத்தவில்லை எனவும் இதனைத்தொடர்ந்து சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடாத்தியபோது கப்பல் வெடித்துச் சிதறியதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இக்கப்பல் யாருடையது என இன்னமும் இனம் காணப்படவில்லை.

சிறீலங்கா இராணுவத்தினர் இக்கப்பலானது விடுதலைப்புலிகளுடையதாக இருக்கலாம் எனவும் அது இத்தீவை விட்டு சென்று கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.