[வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007]
யாழ். குடாநாட்டில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக பெருமளவான சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இராணுவத்தினருக்கு இரசியத் தகவல்கள் கிடைத்ததாகவும்இ இதனால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ‘லங்காருத்’இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முகமாலைஇ நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் பெருமளவிலான உறுப்பினர்களை நிலை நிறுத்தியுள்ளதாக இராணுவத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் அந்த இணையத்தளம்இ இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரும் தமது நிலையை பலப்படுத்தியுள்ளதாகத் கூறிகிறது.
யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நேற்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மோதல் ஒன்று ஏற்படும் என்ற அச்சம் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
யாழ் நகரப்பகுதி உட்பட குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன்இ யாழ் பல்கலைக்கழத்தை அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை பெருமளவான இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இராணுவத்தினருக்கு இரசியத் தகவல்கள் கிடைத்ததாகவும்இ இதனால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ‘லங்காருத்’இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முகமாலைஇ நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் பெருமளவிலான உறுப்பினர்களை நிலை நிறுத்தியுள்ளதாக இராணுவத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் அந்த இணையத்தளம்இ இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரும் தமது நிலையை பலப்படுத்தியுள்ளதாகத் கூறிகிறது.
யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நேற்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மோதல் ஒன்று ஏற்படும் என்ற அச்சம் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
யாழ் நகரப்பகுதி உட்பட குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன்இ யாழ் பல்கலைக்கழத்தை அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை பெருமளவான இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.





