[வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2007]
போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்து எறிய வேண்டும் என்று ஜே.வி.பியினர் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த உடன்பாடு ஐந்தாண்டு கால நிறைவை எட்டுவதற்கு முன்னதாக, அரசாங்கம் அதனை இரத்து செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று ஜே.வி.பி. உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் லொக்கு பண்டாரவின் மேசையில் இருந்த ஒலிவாங்கி அகற்றி, தங்களுக்கு உடனடி பதில் தேவை என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.
இதனையடுத்து நாடாளுமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பமானது.
தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் அரசாங்கம் பதில் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
Thursday, February 22, 2007
போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறியுங்கள்: ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்.
Thursday, February 22, 2007





