[திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007]
சோமாலியா கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையர்களால் ஐ.நா.வின் சரக்கு கப்பல் ஒன்று நேற்று கடத்தப்பட்டுள்ளது. இக்கப்பலில் 6 இலங்கையர் உட்பட 12 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உலக உணவுத்திட்டத்தின் கீழ் 1800 தொன் உணவுப்பொருட்களை ஏற்றிச்சென்ற சோமாலியாவின் பொசாசோ, பேர்பெரா ஆகிய நகரங்களில் பொருட்களை இறக்கிவிட்டு திரும்பும்போதே ஏறக்குறைய ஜி.எம்.ரி. நேரப்படி நேற்று 06.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட கப்பலிலுள்ள பணியாளர்களின் பாதுகாப்புக்குறித்து ஐ.நா.தீவிர கவனம் செலுத்திவருவதாக தெரிவித்த ஐ.நா.வின் உலக உணவுத்திட்ட அதிகாரி ஒருவர் மனிதாபிமான பணிகளை ஸ்தம்பிதம் அடையச்செய்யும் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கதென கூறியுள்ளார்.





