Tuesday, October 15, 2013

சிவராம் ஞாபகார்த்த மண்டபம் யாழினில் திறப்பு!!

மாமனிதர் தராகி சிவராம் ஞாபகார்த்த மண்டபம் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்தினில் திறந்து வைக்கப்படவுள்ளது.யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் திறந்து வைக்கப்படவுள்ள இம்மண்டபம் ஊடகவியலாளர்களது அறிவு வள மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ளது.தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான புகழ் பெற்ற ஊடகவியலாளர்கள் ஊடக பயிற்றுவிப்பாளர்கள் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களிற்கு இங்கு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

யாழ்.நகரின் இராசாவின் தோட்டம் வீதியினில் திறக்கபடவுள்ள இம்மண்டபத்தினில் நாளைய தினம் உத்தியோகபூர்வமான பயிற்சி நெறியினை பிஸப் சௌந்தரம் ஊடக கற்கை மைய இயக்குநர் வணபிதா றூபன் மரியாம்பிள்ளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

திறப்பு விழா நிகழ்வினில் வடமாகாணசபை பிரமுகர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.