Monday, October 14, 2013

தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில், அரசாங்கம் ஏன் இன்னும் முரண்டுபிடிக்கிறது - எரிக்சொல்ஹேய்ம்

இறுதி போரின் போது, உலகின் மிகப்பெரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையே தமது தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில், அரசாங்கம் ஏன் இன்னும் முரண்டுபிடிக்கிறது என்று, இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹேய்ம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இலங்கையில் நிறைடைந்த யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாக கட்டமைப்பு முறையாக செயற்படவில்லை என்பதை, அதன் உள்ளக அறிக்கை நிரூபித்துள்ளது. இந்த நிலையில் அதனை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஒப்பு கொண்டுள்ளார். 

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஏன் இன்னும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர்? என்று சொல்ஹேய்ம் கேள்வி எழுப்பியுள்ளார்.  இவ்வாறு தங்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதன் ஊடாக, சர்வதேச நாடுகளுக்க தாங்கள் நிரபராதிகள் என்று காட்டிவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தொடர்சியான நிராகரிப்பு, இலங்கையை சர்வதேச விசாரணையை தள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.