Saturday, October 12, 2013

இலங்கையில் தமிழின அழிப்பு: தமிழருக்கான பாராளுமன்றக் குழுவினரின் கருத்தாய்வு


பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "இலங்கையில் தமிழின அழிப்பு" என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்று கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.
பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயற்பாட்டளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி- பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது.
இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான, தமிழ் மக்களுக்கும் - வேற்றின மக்களுக்கும், தனிநபர்களுக்கும்- அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்கியமான கலந்துரையாடல் இங்கு இடம் பெற்றது.
மேலும் பல ஆய்வுகள், வெளியீடுகள், தரவுத் தொகுப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்கள் போன்றனவை மூலம் இன்வழிப்பு நடைபெறுவதனை தமிழரல்லாதவர்கள் ஏற்றுக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு முன்நோக்கிய நகர்வாய் அமையப் பெற்றதென ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.