Saturday, September 21, 2013

வரணிப் பகுதியினில் படையினர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் சிற்றூர்த்தி மீது துப்பாக்கிப் பிரயோகம்


வடக்கினில் தொடரும் தேர்தல் வன்முறைகளிடையே இன்று மதியம் தென்மராட்சியின் வரணிப்பகுதியினில் படையினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர்.எனினும் இச் சம்பவத்தினில் எவரும் காயமடைந்திருக்க வில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சியின் வரணி மத்திய மகா வித்தியாலய வாக்களிப்பதற்காகச் சென்ற சாவகச்சேரி உப தவிசாளரை படைப்புலனாய்வாளர்கள் சிறைப்பிடித்ததாகக்கூறப்படுகின்றது. அப் பகுதியிலுள்ள கட்டிடமொன்றில் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியவேளை அவரை மீட்கச்சென்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களது வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொணடனர்.

எனினும் இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடைந்திருக்கவில்லை. தாக்குதல் நடத்திய படையினர் அருகிலுள்ள வரணி 55 ஆவது படைபிரிவு தலைமையகத்தை நோக்கி தப்பிச்சென்றதாக கூறக்படுகின்றது. துப்பாக்கிப் பிரயோகத்திற்குள்ளான வாகனம் மோசமான சேதத்திற்குள்ளாகியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய வாக்களிப்பு மையத்தில் கூட்டமைப்பு சார்பு நல்லூர் பிரதேச சபை உறுப்பினரொருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே பிற்பகல் இரண்டு மணிவரை யாழ்ப்பாணத்தில் மட்டும் 78 வரையான தேர்தல் வன்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

அரியாலை, புத்தூர் , மற்றும் பருத்தித்துறை கோப்பாய் என பல பகுதிகளிலும் வாக்களிப்பு மையங்களைச் சூழ்ந்திருக்கின்ற படைப் புலனாய்வாரள்கள் மக்களை திருப்பி அனுப்பியிருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.

பிந்திய தகவல் பிரகாரம் யாழ்ப்பாணத்தினில் வாக்களிப்பு வீதம் 50 சதவீதத்தினை தாண்டியுள்ளது.கடந்த தேர்தல் வாக்களிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையினில் இது அதிகமாகும்.

இதனிடையே கிளிநொச்சி பன்னங்கண்டி  பகுதியினில் கூட்டமைப்பு வேட்பாளர் சிறீதரன் மீது படையினர் சிலர் தாக்குதல் முயற்சியிலீடுபட்டிருந்த நிலையினில்  மெய்பாதுகாப்பு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.