Saturday, September 14, 2013

தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி த.தே.கூ மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தயாராகும் சிங்கள அமைப்புக்கள்


வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்ட பல அறிக்கைகளுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்போவதாக சிறீலங்கா தேசத்தின் பௌத்த மேலாதிக்க மற்றும் கொடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் கூட்டாக எச்சரித்துள்ளன. 1978ம் ஆண்டு அரசியலைமைப்பின் பிரகாரம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருப்பைப் பாடுகளை சீர்குழைக்கும் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பாகவே தாம் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சிறீலங்காவின் கொடும்போக்கு பௌத்த சிங்கள அமைப்பான ராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் சதாதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர் கூட்டமைப்பினரின் தேர்தல் நடவடிக்கைகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதுடன் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் 1978அரசியலைமைப்பின் பிரகாரம் குற்றத்திற்குரியது என்றும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பல சிங்கள அமைப்புக்களின் உதவியுடன் தாம் கூட்டாக முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கூட்டமைப்பினர் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றாளும் தேர்தல் மற்றும் சட்ட ஒழுங்குகளை மீறிய குற்றத்திற்காக மாகாண கவுன்சிலர்கள் அவர்கள் சத்தியபிரமாணம் செய்யஅனுமதி வழங்கக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார். எனினும் 1978ம் அரசியலமைப்பின் பிரகாரம் வட மாகாண முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை கொழும்புக்கு வருவதைப் பற்றி கனவிலும் நிpனைக்கவேண்டாம் என்று ராவணா சக்தி அச்சுறுத்தி அறிக்கை வெளியிட்டது மட்டும் விதிவிலக்கான செயல் போலும். நீதித்துறை அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக்கப்ட்டதன் விளைவாகவே ராவணா சக்தியின் இக்கருத்தை கருதமுடியும்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.