Tuesday, March 19, 2013

தளபதி வசந்த்திற்கு அஞ்சலி! நான்கு வருடங்களின் பின்னர் கிடைத்த பதில்!!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தினில் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் விடுதலைப்புலிகளது மூத்த தளபதி வசந்தின் நினைவு நிகழ்வு இன்று அவரது குடும்பத்தவர்களினால்  அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.



சுமார் நான்கு வருடங்கள் வரையினில் தளபதி வசந்தினின் நிலை பற்றி தகவல்கள் ஏதும் குடும்பத்தவர்கள் எவருக்கும் கிடைக்காதேயிருந்தது.இந்நிலையினில் தற்போது அம்பலமாகியுள்ள போர் குற்ற புகைப்படங்கிளினில் தளபதி வசந்த் இனது புகைப்படமும் வெளியாகியிருந்தது.

அப்புகைப்பட தொகுப்பினிலிருந்த சிறுவனொருவன் படுகொலை செய்யப்பட்ட பின்னரான புகைப்படமும் வெளியாகியிருந்த நிலையினில் அப்புகைப்படத்தினிலிருந்த ஏனையவர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.

இதையடுத்தே காணாமல் போன தமது மகன் வசந்த் மரணித்துள்ளதாக கருதி அவரது குடும்பத்தவர்கள் மரண வீடு அனுஸ்டித்துள்ளனர்.அத்துடன் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து நினைவு கூரலையும் அனுஸ்டித்துள்ளனர்.வன்னியிலுள்ள அவர்களது வாசஸ்தலத்தினில் இவ்வஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

திருகோணமலையினை சொந்த இடமாக கொண்ட தளபதி வசந்த் தளபதி சொர்ணத்தினது நெருங்கிய சகவுமாவார்.அப்புகைப்படத்தினிலுளள அனைவரும் அவரது படைப்பிரிவை சேர்ந்தவர்களெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.