Friday, March 01, 2013

ஒரு பாலசந்திரனை மட்டுமே சுட்டுக்கொல்ல முடிந்தது - தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர்.-வைகோ

சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மறைமலைநகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் உருவம் பொறித்த முகமூடியை வைகோ அணிவித்தார்.

இதனைதொடர்ந்து மற்ற மாணவர்களும் பாலசந்திரனின் முகமூடியை அணிந்து கொண்டனர். அப்போது அந்த மாணவர்களிடம் வைகோ ஆவேசமாக பேசியதாவது:-

இலங்கையில் இறுதிக்கட்ட போரில் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை கைது செய்த இலங்கை ராணுவத்தினர், பாலசந்திரனின் கண் எதிரேயே பாதுகாப்புக்கு இருந்த 5 விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்றனர். பின்னர் பாலசந்திரனுக்கு சாப்பிடுவதற்கு பிஸ்கெட் தந்தனர். அதனை பால் வடியும் சிறுவன் பாலசந்திரன் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது போர் மரபை மீறி, இளம் சிறுவனை துப்பாக்கியால் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக்கொன்றனர்.


இதில் சிறுவனின் மார்பில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. இலங்கை கொடூரர் ராஜபக்சே, ஒரு பாலசந்திரனை மட்டுமே சுட்டுக்கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர். இவர்களை அவன் என்ன செய்ய முடியும்?. பாலசந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை சேனல்-4 வெட்ட வெளிச்சமாக காண்பித்த பிறகு இலங்கையின் கொடிய போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.


இங்கு பாலசந்திரன் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்.
இதன் பின்னர் வைகோ, மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டார். அப்போது பாலசந்திரன் முகமூடி அணிந்த மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராகவும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது மேடை அருகே இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இலங்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.