Monday, October 08, 2012

வருடம் ஒன்றிற்கு ஒரு இலட்சத்தில் 4.7 வீதமான பெண்கள் மார்பகப் புற்று நோயின் காரணமாக உயிரிழக்கின்றனர்! - சுகாதார அமைச்சு தெரிவிப்பு.

இலங்கையில் ஒரு இலட்சத்தில் இருபது பெண்கள் என்ற அடிப்படையில் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வருடம் ஒன்றிற்கு ஒரு இலட்சத்தில் 4.7 வீதமான பெண்கள் மார்பகப் புற்று நோயின் காரணமாக உயிரிழப்பதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
 
மார்பகப் புற்று நோயை ஆரம்ப கட்டத்தில் அறிந்து கொள்வதற்கான பரிசோதனைகள் நாடலாவிய ரீதியில் 700 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் பெரும்பாலான பெண்கள் இப் பரிசோதனைகள் குறித்து கவனத்திற் கொள்வதில்லை என சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. உரிய பரிசோதனைகளின் மூலம் மார்பகப் புற்று நோயை ஆரம்ப கட்டத்தில் இனங்கொண்டு சிகிச்சை வழங்குவதன் மூலம் உயிரிழப்புக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் மார்பகப் புற்று நோய் விளிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.