Saturday, March 17, 2012

நோர்வே அமைச்சர்களுடன் GTF உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை !

நேற்றைய தினம்(16) உலகத் தமிழர் பேரவையினர், நோர்வே அமைச்சர்கள் சிலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சுல்கைம், எதிர்கட்சியின் தலைவி ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில பிரதி அமைச்சர்கள் சிலரையும் தாம் சந்தித்ததாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் 47 வது இடத்தை வகிக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது என அது மேலும் தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர் பேரவை பல நாட்டுத் தலைவர்களையும் அமைச்சர்களையும் சமீபகாலமாகச் சந்தித்து வரும் நிலையில், இச் சந்திப்புகள் எதற்காக நடைபெறுகின்றன, இல்லையேல் எதனை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது என்பது குறித்து தெளிவாக விளங்கப்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. மற்றும் இச் சந்திப்புகளின் போது எந்த எந்த விடையங்கள் கலந்துரையாடப்பட்டது என்பது போன்ற விடையங்களையும் அவர்கள் தமிழ் மக்களுக்குத் தெரிவிப்பது இல்லை என்றும் சில தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடந்த நோர்வே சந்திப்புக்கூட இவ்வகையில் அமைந்துள்ளது. அது தொடர்பான எத் தகவலையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.



0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.