Thursday, March 08, 2012

ஐயா பழ.நெடுமாறனின் கைதட்டை பெற்றார் அம்மா ஜெயா!

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். .

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.