Thursday, March 22, 2012

இலங்கையின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் பதவி நீக்கம்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நோர்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது.

 இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக எரிக் சொல்ஹெய்ம் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எரிக் சொல்ஹெய்ம் கழற்றி விடப்பட்டிருக்கிறார். அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் அதுன் வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைமையின் முடிவால் எரிக் சொல்ஹெய்ம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை உட்பட இன மோதல்கள் நிகழ்ந்த நாடுகளில் அமைதிப் பேச்சுக்கான ஏற்பாடுகளை எரிக் சொல்ஹெய்ம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.