Saturday, March 17, 2012

சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானத்திற்கு மலேசியா ஆதரவளிக்கவேண்டும்!

ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை மலேசியா ஆதரவளிக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த பேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பாக எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் மலேசியா குறித்த பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் பில் ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளை நம்பி இலங்கைக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.