Friday, March 30, 2012

சிறிலங்காவுக்கு கடுமையான ‘சமிக்ஞை‘ ஒன்றை அனுப்பியுள்ளது – அமெரிக்கா

சிறீலங்காவில் நிலையானதொரு அமைதியை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் அம்மையார் நேற்று வொஷிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையிலேயே இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ஈரான் யேமன் லிபியா சிரியா பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது!
உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளது. அதற்கு உதவ சர்வதேச சமூகம் தயாராகவே உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் புதிய தீர்மானத்தின் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஊக்குவிப்பை வழங்கியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு சிறிலங்கா அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.