Wednesday, March 14, 2012

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளை பார்த்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை-எஸ்.ஜெயானந்தமூர்த்தி

தமிழ் ஊடகங்களும், சில தமிழ் இணையத்தளங்களும் குளப்பகரமான தகவல்களை வெளியிடுவது குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளை பார்த்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.

பிரித்தானியாவில் இன்று இரவு சனல் 4 தொலைக்காட்சியின் “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் தேசிய தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரிய, உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளிவரவுள்ளதாக தெரியவருகிறது.

இதுவரை காலமும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் சிறீலங்காவில் தமிழ் மக்களின் படுகொலைகளை தொடர்பான ஆதாரபூர்வமான உண்மைத் தகவல்களை வெளிக் கொண்டுவந்துள்ளது.

ஆனால், தற்போது ஒரு சிலரின் வேண்டுதலுக்கமைய தேசிய தலைவர் பற்றிய உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக அறிய முடிகிறது.

இது ஒரு சிலரின் வேண்டுதலுக்கு இணங்க சனல் 4 இவ்வாறு வெளியிடவுள்ளது. எனினும், அதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார், சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து தம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் நடந்த பகுதியில் இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாத மர்மம். எனவே தேசிய தலைவரின் விடயமும் மர்மமாகவே உள்ளது.

தலைவர் தொடர்பான விடயத்தில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. மர்மம் வெளிவருவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் என எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.