Monday, March 12, 2012

தமிழரின் திரண்ட பலத்தை சிதைப்பதற்கு மகிந்தவின் கைக்கூலிகள் சதி!! சனல்4 இன் புதிய போர்குற்ற ஆவணப்படத்தின் மூலம் அரங்கேற்ற முயற்சி!! உலகத் தமிழர்களே எச்சரிக்கை!!!

தமிழ் மக்கள் ஆவலுடன், பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது காத்து நிற்கும் விடையம் என்னவென்றால், அது சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள கொலைக்களங்கள் பாகம்- 2 தான். வரும் புதன்கிழமை இரவு 10.55 க்கு இது ஒளிபரப்பாகவுள்ளது யாவரும் அறிந்த விடையம். ஆனால் இதில் சில சர்ச்சைகள் தற்போது எழுந்துள்ளது. வழமைபோல இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா ? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கத்தை உண்டுபண்ணும் எனத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் தேசிய தலைவரின் இருப்பு அல்லது இறப்புக் குறித்து தமிழ் மக்கள் எக் கருத்தையும் தற்போது வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதாகும். இந் நிலையில் சனல் 4 தொலைக்காட்ச்சி இதனை தனது ஆவணப்படத்தில் புகுத்த காரணம் என்ன ? போர்குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணப்படத்தில் தேசிய தலைவர் இருப்புக் குறித்து ஆராயவேண்டிய கடைப்பாடு எதற்கு என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது. உலகத் தமிழர்கள் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பதுபோக, இது ஒரு சர்ச்சையைத் தோற்றுவிக்கக்கூடிய விடையம் எனவும் சொல்லப்படுகிறது.

கொலைக்களங்கள் பாகம்- 2இன் தயாரிப்பாளர்களை அணுகிய சில தமிழர்கள், தேசிய தலைவர் இறந்துவிட்டதாகவும் அதுதொடர்பான செய்தியையும் இதில் இணைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இதனை அடுத்தே சர்ச்சைக்குரிய இவ்விடையம் சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் இருப்புக் குறித்து காலம் தான் பதில்சொல்லவேண்டும் ! அவரின் நிலைகுறித்து ஊகங்களையும் அனுமானங்களையும் தெரிவிக்க முடியாது. இலங்கை அரசானது அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்து, தொலைக்காட்சியில் காட்டிய அவரது புகைப்படத்தை தமிழ்மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

தன்னை ஒரு நடுநிலையாளர் எனக் காட்டிக்கொள்ள சனல் 4 தொலைக்காட்சியானது இதுபோன்ற சில கட்சிகளை தமது ஆவணப்படத்தில் இணைத்திருக்கலாம். ஆனால் தேசிய தலைவர் தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்தும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா ? என்பது பெரும் சந்தேகமாக உள்ளது. எனவே சனல் 4 தொலைக்காட்சி காட்டவிருக்கும் இந்த ஆவணப்படத்தில் வரும் தேசிய தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரிய விடையங்கள் குறித்து மக்கள் தெளிவாக இருத்தல் நல்லது. இவ்வாறானதொரு காட்சி இந்த ஆவணப்படத்தில் வருகின்றது என்பதனை நாம் முன்கூட்டியே அறியத்தர விரும்புகிறோம். இதனைத் தமிழ் மக்கள் தெரிந்துவைத்துக்கொண்டு தான் இந்த ஆவணப்படத்தை பார்ப்பது நல்லது !

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.