Thursday, February 16, 2012

தோனிக்கு குவியும் பாராட்டுகள்

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி போட்டியை வென்று தரும் மேட்ச் வின்னராக இந்தியாவின் அணித்தலைவர் தோனி உள்ளார்.

ஒருநாள் கிரிக்கட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. ரன்ரேட் அதிகமாக தேவைப்படும், பின்வரிசையில் வரும் போது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.

எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் மீறி இந்திய அணித்தலைவர் தோனி சிறப்பாக செயல்படுகிறார் என்றால் முதல் காரணம் இவரது கூல் பாணி தான்.

தற்போதைய முத்தரப்பு தொடரில் கடைசி நேரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போன்று இலங்கைக்கு எதிராக 3 ஓட்டங்கள் எடுத்து போட்டி டை ஆக காரணமாக இருந்தார்.

தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக துடுப்பெடுத்து ஆடும் போது அசத்துகிறார். சேஸ் செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது.

இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், சேஸ் செய்த போது 50 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை சேஸ் செய்த போது எடுத்தது தான்.

அணித்தலைவர், விக்கெட் கீப்பர், துடுப்பாட்ட வீரர் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார்.

இதுகுறித்து இலங்கை அணியின் தலைவர் ஜெயர்வர்தனா கூறுகையில், அடிலெய்டு போட்டியில் ஒரு இன்ச் அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம் இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது என்றார்.

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் கூறுகையில், தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.