தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் வி.பாலகுமாரன் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஐபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமான ‘டெக்கன் குரோனிகல்’ நாளிதழுக்கு வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்துள்ளார்.
புலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் குறித்து எனக்கு எதுவும் தெரியாது அவர் தடுப்பில் உள்ளாரா என்பது கூட தனக்குத் தெரியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருவதாக வெளியாகும் செய்திகள் போலியானது. 30 வருட கால யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாரிய அளவிலான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு படையினர் பரவலாக நிலைகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் வாழ்க்கை முறையை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் இந்த செயற்றிட்டங்களை ஆராயாத சிலர் சிறீலங்காவுக்கு எதிரான தடைகளை விதிப்பது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள தமிழ் மக்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் கோத்தபாய கோரிக்கை விடுத்துள்ளார்.
புலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் குறித்து எனக்கு எதுவும் தெரியாது அவர் தடுப்பில் உள்ளாரா என்பது கூட தனக்குத் தெரியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருவதாக வெளியாகும் செய்திகள் போலியானது. 30 வருட கால யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாரிய அளவிலான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு படையினர் பரவலாக நிலைகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் வாழ்க்கை முறையை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் இந்த செயற்றிட்டங்களை ஆராயாத சிலர் சிறீலங்காவுக்கு எதிரான தடைகளை விதிப்பது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள தமிழ் மக்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் கோத்தபாய கோரிக்கை விடுத்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.