Tuesday, February 14, 2012

கொழும்பு - ரொரிங்டனில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு! நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் கடத்தப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகம்.

கொழும்பு - டொரிங்டன் மற்றும் பொத்தேஜு மாவத்தைக்கு இடைப்பட்ட பகுதியில் மின்சார கம்பத்துக்கு அருகில் வைத்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மேற்படி சடலம் இன்று (14ம் திகதி) பகல் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரித்தார்.
நாராஹென்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் சடலம் குறித்து எதுவித தகவலையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரோ, நாராஹென்பிட்டி பொலிஸாரோ வெளியிடவில்லை. ஆனால் சடலம் எரிந்த நிலையில் காணப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.