Thursday, February 23, 2012

அமெரிக்காவில் இரு உலங்குவானூர்திகள் மோதல்: 7 கடற்படையினர் பலி

அமெரிக்காவின் அரிசோனாவில் புதன் இரவு இரு உலங்கு வானூர்திகள் மோதிய விபத்தில் ஏழு அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கடற்படையின் பறக்கும் பிரிவைச் சேர்ந்த கோப்ரா மற்றும் ஹ்யூ ரக உலங்கு வானூர்திகள் ஜுமா நகரின் அருகில் இராணுவப் பயிற்சியை மேற்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நடந்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்தது.

இவ்விபத்து ஜுமா பயிற்சி வளாகத்திலிருந்து தொலைதூரத்தில் நடந்துள்ள அதேவேளை விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை பல வழிகளில் இடம்பெறுகிறது.

கடந்த செப்டெம்பரில் கலிபோர்னியாவில் ஓர் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் இரு கடற்படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.