Monday, December 05, 2011

யாழில் பெண்களின் தாலிக் கொடிக்கு ஆபத்து!

அதிகாலை நேரம் வீட்டுக்குள் தந்திரமாகப் புகுந்த திருடன் அங்கு பிள்ளைகளுடன் படுத்திருந்த பெண்ணுக்கு மயக்க மருத்தை விசிறி இவளின் கழுத்திலிருந்த 2 லட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளான்.

திடிரென எழுந்த இவளின் கணவர் திருடனைப் பிடிக்க முற்பட்ட போது திருடன் அகப்படவில்லை.
இத்துணிகரமான சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள சாவல்கட்டு கிராமத்தில் இடம்பெற்றது.

மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி மகேந்திரன் என்பவருடைய தாலிக்கொடியே இத்திருடனின் கைவரிசைக்கு இலக்கானது.

குறித்த பெண் பிள்ளைகளுடன் வீட்டுக்குள் படுத்திருந்தார். வீட்டுக்கதவைப் பூட்டி திறப்பை கதவிலேயே விட்டு விட்டு வெளியே கணவர் உறங்கிவிட்டார்.

அதிகாலை 3 மணியளவில் மதிலால் ஏறி வீட்டுக்குள் சென்ற திருடன் கதவிலிருந்த திறப்பின் உதவியுடன் கதவைத் திறந்து உள்ளே சென்று கையடக்கத் தொலைபேசியின் வெளிச்சம் மூலம் தூக்கத்திலிருந்தவர்களை அடையாளம் காணும் போது படுத்திருந்த பெணின் தங்கத் தாலி கள்வனின் கண்ணில் தென்பட்டது.

அந்த நேரம் பெண்ணின் கன்னத்தில் கையை வைத்து மயக்க மருந்து விசிறி திருடன் தாலிக்கொடியை அறுத் துக் கொண்டு ஓடி விட்டதாகக் கூறப்பட்டது.

இந்தத் திருட்டு தொடர்பாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரி மல்கமே தலைமையில் சென்ற பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.