Saturday, December 31, 2011

வரும் ஆண்டை எமது மக்களை மீட்கும் ஆண்டாக வரவேற்போம்.

அனைவருக்கும் 2012 இனிய புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
வறுமையும் அறியாமையும் நீங்கி உலகெங்கும் வன்முறைகள் தொலைந்து சாந்தியும் சமாதானமும் நிலைத்திருக்க வரும் புத்தாண்டு நல்வரவாகட்டும். அடக்குமுறைகள் இல்லாதொழிந்து இனங்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கி சுயகௌரவத்துடன் வாழ நல்லதோர் ஆண்டாக மலரட்டும்.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் கசப்புணர்வுகளை நீக்கி ஐனநாயக முறைப்படி தமிழ்மக்களின் விருப்பத்திற்கேற்ப தெழிவான சமாதான தீர்வை முன்வைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறின் மீண்டும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள வன்முறையை நாடிச்செல்வார்கள்.

எனவே இலங்கை அரசும் சர்வதேசமும் துரிதமாக செயற்பட்டு வரும் புத்தாண்டை தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கின்ற ஆண்டாக மலரச்செய்யும் பொறுப்பும் கடமையும் உண்டு.

30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அனைத்தையும் இழந்த மக்கள் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர முயற்சி செய்யும் வேளையில் அவர்களுக்கு ஆதரவாக பக்கபலமாக நின்று அவர்களுக்கு உதவிடும் பாரிய கடமை அனைவருக்கும் உண்டு.

இதனை செய்ய தவறின் பாதிக்கப்பட்ட மக்கள், சமூகத்தின் மீது கோபம் கொள்வார்கள் அதன் விளைவு விபரீதமாகும். எனவே தமிழ் மக்களின் நிலையான வாழ்வாதார நிலைப்படுத்தலுக்கு சரியான பொறிமுறையூடான தீர்வு அவசியம். எனவே அத்தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

எம் இனத்தின் உரிமைக்காக வாழ்ந்த எமது மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதும், வலுவிழந்த மக்களை தூக்கி விடுவதும் புலம் பெயர்ந்த மக்களாகிய எமது கடமை எனவே வரும் ஆண்டை எமது மக்களை மீட்கும் ஆண்டாக வரவேற்போம்.

குறிப்பு: வரும் 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இரு தேர்தல்கள் நடைபெறவுள்ளது எனவே பிரான்ஸ் குடியுரிமை பெற்ற அனைத்து மக்களையும் எதிர் வரும் 31.12.2011க்கு முன் வாக்காளர் டாப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

அனைத்து மக்களும் கல்வியில் முன்னேறி, வறுமையின்றி சுயமாக வாழ எமது நல்வாழ்த்துக்கள்.

நா. பாலச்சந்திரன்

உள்துறை அமைச்சர்

நாடுகடந்த தமிழீழ அரசு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.