Saturday, December 17, 2011

இலங்கை அரசின் குட்டுகளை வெளியிடும் சனல் 4இன் செய்திகக் காணொளிகள்! (காணொளி)

வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை வேடிகையான விடையம் என சனல் 4 தொலைக்காட்ச்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐ.நாவின் அறிக்கையை அது இணைத்து சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்த "காலம் மக்ரே" அவர்கள் இதில் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும் "தண்டிக்கப்படாத குற்றங்கள்" என்ற தலைப்பில் மற்றுமொரு 30 நிமிட ஆவணப்படம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்ச்சி வெளியிட உள்ளது. வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தில் புதிய பல போர் குற்ற ஆதாரங்கள் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.