Tuesday, July 26, 2011

ஓஸ்லோ நகர வீதியில் மலர்களை ஏந்திய மக்கள் வெள்ளம்!

ஒஸ்லோவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரட்டைத்தாக்குதல் சம்பவங்களில் பலியானவர்களை நினைவுகூரும் விதமாக றோசா மலர்களை ஏந்தியவாறு மாபெரும் ஊர்வலம் நோர்வேயின் நகரங்கள் மற்றும் பட்டினங்கள் எங்கும் நடத்தப்பட்டு வருகின்றன.’
இன்று இரவு வீதிகள் எல்லாம் மலர்களை ஏந்திய மக்கள் அன்பு மயமாகக் காட்சியளிக்கின்றனர்’ என்று ஒஸ்லோவில் திரண்டிருந்த ஒரு லட்சம் மக்களிடையே பேசும்போது அந்நாட்டு தலைமை அமைச்சர் தெரிவித்தார்.

இரட்டைத்தாக்குலில் உயிரிழந்தோரின் சரியான எண்ணிக்கை 76 ஆகும் 93 அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இரங்கலில் பங்குபற்றுவதன் மூலம் நீங்கள் எல்லாரும் ஜனநாயகத்திற்கு ‘ஆம்’ என்று வலியுறுத்திக்கூறுகின்றீர்கள் என்று பிரதமர் ஜென்ஸ் ஸரோரென்பேர்க் மக்கள் மத்தியில் தெரிவித்தார்

ஜனநாயகம், சகிப்புத்தன்மை, ஐக்கியம் ஆகியவற்றிற்கான பேரணி இது என்றும் தீமை ஒருவரைக் கொல்லலாம். ஆனால் மக்களை வெற்றி கொள்ள முடியாது என்றும் பிரதமர் சொன்னார். மத்திய ஒஸ்லோவின் பல வீதிகள் அனைத்தும் மக்களுக்கும் இடம்கொடுப்பதற்காக மூடப்பட்டடிருந்தன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.