Saturday, June 11, 2011

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் பத்துபேருக்கு பதவி உயர்வு!

10 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், பிரதி காவல்துறை மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வுகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல், அமுல்படுத்தப்படும் என அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆர்.எம் வீரசூரிய, டி.எல்.எஸ்.ஜி.எல். பீரிஸ், ஜே. குலத்திலக, ரி.கே.பி. டி சில்வா, மற்றும் ஜி. திசாநாயக்க ஆகிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இது தவிர, எம்.கே.டி. டபிள்யூ. அமரசிங்க, டபிள்யூ. அபேநாயக்க, ஆர்.டபிள்யூ. எம். சி. ரணவண, என்.டி. தலுவத்த மற்றும் ஏ.ஆர்.வைத்தியலங்கார ஆகிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.