
இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை தொடர்ந்து வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி வரும் ஜூன் 14ம் திகதி புது யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 1 மணித்தியாலம் நடக்கவிருக்கும் இந் நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராயப்படவுள்ளதாகவும் அது செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வேளை இந்த புதிய ஆதாரக் காணொளிகளில், பெண்போராளிகளைக் கொல்வதும், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் பெண்களை இறந்த உடலங்களோடு தூக்கிப் போட்டு அவர்களையும் கொலை செய்வதையும் இக் காணொளி கொண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது . இக் காணொளி ஜூன் 14 ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.