அன்புக்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழ குடிமக்களே! தமிழினப் படுகொலையாளி, சர்வாதிகாரி, மானிட விரோதி, பயங்கரவாதி ராஜபக்சேக்கு பிரித்தானியா செல்வதற்கு பிரயாண அனுமதியளித்து பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களை சற்றும் மதிக்காமல் எமது உணர்வைக் கொச்சைப்படுத்தியுள்ளது.
எமது உடன் பிறப்புக்களே நரபலிவேட்டையாடிய அரக்கன் மகிந்த ராஜபக்சாவை தனது நாட்டுக்குள் நுழைய அனுமதி அழித்தமையைக் கண்டித்து ஆயிரத்துக்கும் அதிகமான பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் மகிந்த தங்கியுள்ள விடுதியைச் சுற்றி முற்றுகையிட்டுள்ள சமயத்தில் அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சுவிஸ் ஈழத்தமிழரவையும் சுவிஸில் அமைந்துள்ள பிரித்தானியத் தூதரகத்திற்கு முன் நாளை 03.12.2010 வெள்ளிக்கிழமை, பிற்பகல் 14.30 மணிக்கு கண்டன ஒன்றுகூடலொன்றை ஓழுங்குபடுத்தியுள்ளது.
அவசரமும் அவசியமும் நிறைந்த இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்களையும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
கவனயீர்ப்பு இடம்பெறும் இடம்: Helvetiaplatz, 3005 Bern
காலம்: வெள்ளிக்கிழமை, 03.12.2010
நேரம்: பிற்பகல் 14.30 மணி
சுவிஸ் ஈழத்தமிழரவை







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.