மரடோனா பயிற்சியாளராக தொடருவார் என்று ஆர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஜுலியோ ஹம்பர்டோ கிராடனோ கூறியுள்ளார்.
உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்டினா படுதோல்வியுற்றது. இதற்கு பின் மரடோனா பயிற்சியாளராக தொடருவாரா? மாட்டாரா? அல்லது நீக்கப்படுவாரா? அவராக நீங்குவாரா? என்று பல குழப்பங்கள். இதற்கிடையே ஆர்ஜென்டினா திரும்பியதும் மரடோனா அளித்த பேட்டியில், எனது நேரம் முடிந்து விட்டது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மரடோனாவை பதவி விலக் சொல்லி எந்த நிர்பந்தமும் செய்யவில்லை, ஆர்ஜென்டினாவில் உதைப்பந்து வளர்ச்சிக்காக 30 வருடங்களுக்கு மேல் அவர் உழைத்திருக்கிறார்.
மரடோனா ஒரு ஜாம்பவான். இன்னமும் அவர் ஒப்பந்தத்தில் இருக்கிறார்.மரடோனா எடுக்கும் முடிவை ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் ஏற்கும். மரடோனா மட்டுமே அர்ஜென்டினாவில் அவர் நினைத்ததை செய்ய முடியும் என்று சொல்லப்படும் அளவுக்கு செல்வாக்குள்ள மனிதர் என்று அதன் தலைவர் ஜுலியோ ஹம்பர்டோ கிராடனோ கூறியுள்ளார். ,







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.