Friday, April 09, 2010

தமிழரின் வாக்குவீதம் குறைந்தமையே ததேகூ பின்னடையக் காரணம் : சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைந்தமையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவுக்குக் காரணம் என அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவரிடம் கருத்துக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தேர்தல் குறித்த தமிழ் மக்களின் குறைந்த பட்ச ஆர்வமே பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் கைகள் ஓங்கியிருப்பதற்கு காரணம்.

இனிவரும் தேர்தல்களின் போதாவது தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என நாம் கருதுகின்றோம்" என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.