திருகோணமலைக்கு வடக்கே உள்ள தமிழ்க்கிராமமான கும்புறுபிட்டியில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வாக்குபெட்டியிலிருந்து வாக்குச்சீட்டுக்களை ஒரு ஆயுதம் தாங்கிய கோஷ்டி வியாழன் மாலை களவாடிச்சென்ற சம்பவத்தை அடுத்து அங்கு இடம்பெற்ற வாக்களிப்பு ரத்துச்செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் முடிவு வரும் வரை திருகோணமலைத் தேர்தல் தொகுதியின் முடிவை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.
மற்ற இரண்டு தேர்தல் தொகுதிகளான மூதூர் மற்றும் சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.