அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் 28 பேரை கைதுசெய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கைதுசெய்யப்பட வேண்டிய 28 பேருடைய பெயர்ப் பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே காவற்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக காவற்துறைத் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த பட்டியலில் தம்பர அமில தேரரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய உத்தரவு கிடைத்தவுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அரச புலனாய்வுப் பிரிவு, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியவவற்றின் பொறுப்பதிகாரிகளான பிரதிக் காவற்துறை மா அதிபர்களை அழைத்துள்ள காவற்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய பட்டியலில் உள்ளவர்களை கைதுசெய்வதற்கான வழக்குகளை பதிவுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளதுடன் 10 நாட்களுக்குள் அனைவரையும் கைதுசெய்யுமாறும் பணித்துள்ளார்.
எவரையும் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் வைத்து கைதுசெய்ய வேண்டாம் எனவுமத் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் மூன்று ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
பிரபல இணையத்தளம் ஒன்றின் ஆசிரியர், தொழிற்சங்க, மாணவர் சங்கங்களில் தலைவர்கள், பாதாள உலக குழுவினருடன் தொடர்புகளை கொண்டிருக்கும் நான்கு பேர் உள்ளிட்ட 28 நபர்களின் பெயர்கள் இதில் அடங்கியுள்ளதாக காவற்துறை தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.